ஆப்நகரம்

மாஸ்க்குகளால் உருவான ஆடை... சென்னை திருநங்கை டிசைனர் அசத்தல்

கோவையை பிறப்பிடமாகக் கொண்ட பிரஸ்ஸி சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப்டிசைனில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Samayam Tamil 19 Oct 2020, 1:07 pm
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுக்க எல்லாத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அனதவகையில் வரப்போகும் தீபாவளியில் என்னென்ன மாற்றங்களைக் ஒண்டு வருமோ என்று பத்திரிகைகள் பலவும் யூகங்களைத் தெரிவித்து வரும் நிலையில், ஆடை வடிவமைப்பில் புதிய உத்தியால் கவனம் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர்.
Samayam Tamil pressi


கோவையைத் தந்து பிறப்பிடமாகக் கொண்ட திருநங்கை பிரஸ்ஸி, சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகளால் ஃபேஷன் உலகிலும் சிறந்து விளங்க முடியும் என நிரூபித்த இவர், மேலும் பல திருநங்கைகளுக்கு தற்போது ஆன்லைனில் ஃபேஷன் வகுப்புகளை எடுத்து வருகிறார்.



சமீபத்தில் ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்’ என்ற மீம் சமூக வலைதளங்களில் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு புதிய முகக்கவச ஆடையை வடிவமைத்துள்ளார். மாஸ்க்குகளால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி