ஆப்நகரம்

சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழப்பு!

சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது மின்சார ரயில் மோதியதில் 2 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Samayam Tamil 25 Sep 2018, 10:34 am
சென்னை கிண்டி அருகே இன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 பேர், மின்சார ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழப்பு!
சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழப்பு!


சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயல்பவர்கள் மீது மின்சார ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் பயணிகள் ரயில் நிலையங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களின் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்றும் நடைமேம்பாலங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை-கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க சிலர் முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் விவரம் இன்னும் வெளிவரவில்லை.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்