ஆப்நகரம்

விஜய்யின் மெர்சல் படத்துக்கு முன் மாதிரியான 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் காலமானார்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரூ.5க்கு மருத்துவ சிகிச்சை அளித்த மக்கள் மருத்துவர் திருவேங்கடம் காலமானார்

Samayam Tamil 16 Aug 2020, 4:23 pm
சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் ரூ.5க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் ரூ.2க்கு மருத்து சேவையாற்றிய அவர், அதன்பிறகு அதிகபட்சமாக 5 ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கி வந்தார்.
Samayam Tamil மருத்துவர் திருவேங்கடம் (இடது)
மருத்துவர் திருவேங்கடம் (இடது)


இந்த நிலையில், மருத்துவர் திருவேங்கடம் (70) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார். அவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.

மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவு அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அவரை அறிந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய் மருத்துவர் காதாப்பாத்திரம் மருத்துவர் திருவேங்கடத்தை முன்மாதிரியாக கொண்டதுதான் என்று கூறப்படுகிறது.

5 வயது சென்னை சிறுமியின் உலக சாதனை; அதுவும் தலைகீழாக - நீங்களே பாருங்க!

மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசமி, “5 ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியவர்” என்று புகழாரம் சூடியுள்ளார்.



திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்!. எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி