ஆப்நகரம்

சென்னை சேலையூர் மாதாவரம் பகுதிகளில் புதன் கிழமை மின் தடை

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சேலையூர் மற்றும் மாதாவரம் பகுதிகளில் புதன்கிழமை மின்தடை ஏற்படும்.

Samayam Tamil 9 Sep 2019, 4:34 pm
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சேலையூர் மற்றும் மாதாவரம் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.
Samayam Tamil IMG_20190909_163017


அதன்படி, மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலையூர் பகுதிக்குட்பட்ட, திருவேஞ்சேரி, ஸ்ரீராம் நகர், ஜோதி நகர், சதீஷ் அவென்யூ, ராஜீவ்காந்தி இ.எஸ்.ஐ.சி நகர், காமராஜர் தெரு, பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, சத்திய மூர்த்தி நகர், அண்ணா தெரு, செல்வராஜ் தெரு, பஜனை கோயில் தெரு, அக்ரம் மெயில் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், பாரத் நகர், பவானி நகர், காமராஜ் நகர், ரங்கநாதன் நகர், சீனிவாசன் நகர், பாய் தோட்டம், பத்மாவதி நகர் பகுதி விரிவு, ரூபி ரீஜென்சி, ரூபி கிராண்ட், ஆய்யனார் அவென்யூ, ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடைக்கு ஏற்ப தங்கள் பணி நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
அதேபோல் சேலையூர் பகுதியில், லெதர் எஸ்டேட், ஜம்புலி, காலனி, கே.கே.ஆர் டவுன், கே.கே.ஆர் கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர், ஏ.பி.சி.டி காலனி, மேதா நகர், பத்மாவதி நகர், லோகம்மாள் நகர், சிட்டினேஸ்ட் பாஷ்சியம் ந்கர், சுப்பிரமணி நகர், டெலிபோன் காலணி தெற்கு எஸ்.ஆர்.சி மேதா லிட்டில் விங்ஸ் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் மாலை 5 மணிக்கு முன்னதாக முடிந்துவிட்டால் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி