ஆப்நகரம்

Coronavirus in Tamil Nadu: யாருக்கு கொரோனா பாதிப்பு? செக் பண்ண சென்னையில் அதிநவீன வசதி- முக்கிய அறிவிப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jan 2020, 10:47 am
சீனாவில் தொடங்கி அமெரிக்கா, தென் கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Corona Virus


சீனாவில் மட்டும் 213 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 9 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சீனாவில் இருந்து திரும்பிய கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவிற்கு வெறும் நிலாச்சோறு; ஆனால் அதிமுகவிற்கு நீல் ஆம்ஸ்ட்ராங் - அமைச்சர் கலகல!

அவர் திருச்சூர் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவில் புனேவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் அதற்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தொழுநோய் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த முகாம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அண்டை நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளிவந்த உடனே, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. இதுவரை தமிழகத்திற்கு வந்த யாருக்கும் நோய்க்கான அறிகுறிகள் இல்லை.

ஏன் இப்படி ஓட்றீங்க; அப்புறம் அவ்வளவு தான் - பிறந்த நாளில் அதிரவிட்ட அழகிரி!

சீனாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் அவர்களது வீடுகளிலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனா வைரஸ் பற்றி மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். புனேவிற்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி