மெரினா, நேப்பியர் பாலம் அருகே, விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் தவித்த வாலிபரை குறித்த நேரத்தில் காப்பாற்றி , தலைமை செயலாளர் இறையன்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை,வேளச்சேரியை சேர்ந்தவர் குமரசேன் (34). இவர், நேற்று காலை காமராஜ் சாலை வழியாக பூக்கடை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
நேப்பியர் பாலம் அருகே வரும்போது, ஆட்டோ ஒன்று, குமரேசன் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்தானது. இந்த விபத்தில், குமரேசன் காலில் முறிவு ஏற்பட்டு, ரத்தவெள்ளத்தில் தவித்தார்.
அப்போது, அந்த வழியாக தலைமை செயலாளர் இறையன்பு காரில் வந்தார். இந்த விபத்தை பார்த்து அவர் உடனடியாக காரை விட்டு இறங்கினார். போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் உடனடியாக தகவல் தந்தார்.
இதையடுத்து, குமரேசன் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்து போராடிய நபரை மருத்துவமனைக்கு அனுப்பிய தலைமை செயலாளர் இறையன்புவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,வேளச்சேரியை சேர்ந்தவர் குமரசேன் (34). இவர், நேற்று காலை காமராஜ் சாலை வழியாக பூக்கடை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
நேப்பியர் பாலம் அருகே வரும்போது, ஆட்டோ ஒன்று, குமரேசன் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்தானது. இந்த விபத்தில், குமரேசன் காலில் முறிவு ஏற்பட்டு, ரத்தவெள்ளத்தில் தவித்தார்.
அப்போது, அந்த வழியாக தலைமை செயலாளர் இறையன்பு காரில் வந்தார். இந்த விபத்தை பார்த்து அவர் உடனடியாக காரை விட்டு இறங்கினார். போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் உடனடியாக தகவல் தந்தார்.
இதையடுத்து, குமரேசன் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்து போராடிய நபரை மருத்துவமனைக்கு அனுப்பிய தலைமை செயலாளர் இறையன்புவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.