ஆப்நகரம்

குழந்தை விழுங்கிய மொபைல் பட்டன்: சென்னையில் விபரீதம்

சென்னையில் ஒரு குழந்தை மொபைல் போன் பட்டனை விழுங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 May 2018, 10:49 am
Samayam Tamil za54-jpg-60665563854917674
சென்னையில் ஒரு குழந்தை மொபைல் போன் பட்டனை விழுங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு 3 வயதில் உத்தேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக செல்போன் பட்டனை பிய்த்து விழுங்கியுள்ளது.

இதனை உடனே கவனித்த குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அடுத்த செய்தி