ஆப்நகரம்

கொரோனாவோடு வாழ பழகிட்டாங்களோ? - சென்னையில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை!

கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு மாதந்தோறும் பலகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும், வார விடுமுறைகளை கொண்டாட திரையரங்குகளின் கதவுகள் மீண்டும் எப்போது திறக்கும் என்பதுதான் பெற்றோர், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 8:04 pm
கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு மாதந்தோறும் பலகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும், வார விடுமுறைகளை கொண்டாட திரையரங்குகளின் கதவுகள் மீண்டும் எப்போது திறக்கும் என்பதுதான் பெற்றோர், மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
Samayam Tamil citizens practice living with corona slow return to normal life in chennai
கொரோனாவோடு வாழ பழகிட்டாங்களோ? - சென்னையில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை!

இந்த எதிர்பார்ப்பு ஈடேற இன்னும் எவ்வளவு மாதங்கள் ஆகுமென்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகரில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள சென்னைவாசிகள் குறித்து விவரிக்கிறது இந்தப் புகைப்பட கட்டுரை.


அலையோடு உறவாடும் சிறுமி

கொரோனா பொதுமுடக்கத்தின்போது பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை மெரினா கடற்கரையில் இன்றும் தொடர்கிறது. மெரினாவில் பொதுமக்களை மீண்டும் எப்போப்பா அனுமதிப்பீங்க என்று கோர்ட் கேட்கும் அளவுக்கு இந்த விஷயம் போய் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாங்கதான் கொரோனாவுடன் வாழ பழகிட்டோமே அப்புறம் என்ன எங்களுக்கு பயம்னு சொல்லும்படியாகமெரினாவில் நுரை பொங்கும் அலை நனைந்து குதூகலிக்கிறாள் சிறுமி ஒருத்தி.

நாய் குட்டியுடன் அன்பு பாராட்டும் சிறுவன்

கொரோனா பாதிப்புக்கு எளிதில் ஆளாவோரின் பட்டியலில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் முக்கிய இடத்தில் உள்ளனர். ஆனால், இந்த எச்சரிக்கையை பற்றியெல்லாம் கவலைப்படாமல், செல்லப் பிராணிகளான நாய் குட்டி, பூனை குட்டியுடன் அன்பு பாராட்டும் சென்னை சிறுவன்.

ரயில் பயணம்

: ரயில் பயணங்கள் எப்போதும் சுகமானவை. பல மாதகால பொதுமுடக்கத்துக்கு பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான ரயில் பயணத்துக்கு தயார் நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஸ்டைலாக நடந்து செல்லும் சிறுமி.

இளைஞர் பட்டாளம்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு இடங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். ஒன்று மாநகராட்சி பூங்காக்கள், இன்னொரு இடம் மாநகராட்சி விளையாட்டு திடல்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்த மாநகாட்சி விளையாட்டுத் திடல்கள் அண்மையில் திறக்கப்பட்டன. கொரோனாவெல்லாம் இனிமே எங்களை ஒன்றும் செய்யாது என்பது போல, விளையாட்டுத் திடல்களில் உற்சாகமாய் குவியும் இளைஞர் பட்டாளம்.

கடமை தவறாத மாநகராட்சி ஊழியர்கள்

சென்னை மாநகரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனேகமாய் பழைய நிலைக்கு திரும்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம் எங்களுக்கு வேலைக்கு ஆகாது. நாங்க ஆபிசுக்கு போயே ஆக வேண்டும். அப்போதுதான் கம்பெனிக்கு லாபம்னு கெத்தாக சொல்லும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று அக்கறையுடன் பரிசோதிக்கும் மாநகராட்சி ஊழியர்.

அடுத்த செய்தி