ஆப்நகரம்

தலைநகர் மேகம் சூழ்ந்தே காணப்படுகின்றது, ஏன் தெரியுமா?

மத்திய-மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும், வடக்கு கரையோர அந்திராவிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகரவேயில்லை...

Samayam Tamil 16 Sep 2020, 4:00 pm
சென்னை நகரமே மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஆங்காங்கே சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தலைநகர் மேகம் சூழ்ந்தே காணப்படுகின்றது, ஏன் தெரியுமா?
தலைநகர் மேகம் சூழ்ந்தே காணப்படுகின்றது, ஏன் தெரியுமா?


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகவே, சென்னை வானிலையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 26 டிகிரி முதல் 32 டிகிரி வரை காணப்படும். ஆங்காங்கே பகல், அல்லது இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

இப்போதைய நிலவரப்படி நகரத்தில் 1. 5 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையாக 31. 7 டிகிரி வெயில் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது.

நீட் தேர்வில் 97% கேள்விகள் மாநில பாடத்திட்டம்தான்...

இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும், வடக்கு ஆந்திரா கரையோர பகுதிக்கும் நடுவில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தகவல் அளித்தார்.

அடுத்த செய்தி