ஆப்நகரம்

வண்டலூர் சரணாலயத்தில் கூண்டில் அடைப்பதால் நோய்த் தாக்கத்தில் விலங்குகள்!

கூண்டில் அடைத்து வைக்கப்படும் விலங்குகளுக்கு நோய்த் தாக்கம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 21 May 2018, 2:36 pm
சென்னை: கூண்டில் அடைத்து வைக்கப்படும் விலங்குகளுக்கு நோய்த் தாக்கம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil Vandalur


பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு விலங்கியல் நிபுணர்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 412 பாலூட்டிகள் குறித்து ஓராண்டு ஆய்வு செய்தனர். அதில் கூண்டில் அடைத்து வைக்கப்படும் விலங்குகளுக்கு ஒட்டுண்ணித் தாக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம் வெளியில் சுதந்திரமாக நடமாட விடும் விலங்குகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வறிக்கை ’வாழ்வியல் அறிவியல் தொடர்பான சர்வதேச ஆய்வு இதழில்' வெளியிடப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் காணப்படும் பல்வேறு வகையான ஓட்டுண்ணிகளின் செயல்பாடுகளை கண்டறிவதே எங்கள் நோக்கம் என்று விலங்கியல் துறை பேராசிரியர் குணசேகரன் மற்றும் அவரது ஆய்வு மாணவர் ஷோபனாவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பாலூட்டிகளில் இருந்து உண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை சேகரித்துள்ளனர். அதில் 13 வகை பூச்சிகள், 10 வகை உண்ணி, 5 வகை பிளே, 4 வகை பேன் ஆகியவை அடங்கும். இந்தப் பூச்சியினங்களால் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

எனவே விலங்குகளை பராமரிக்கும் ஊழியர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற பாதிப்புகள் உயர் வெப்பநிலை, ஈரப்பதமிக்க சூழல்களில் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clock ticks, parasites too, for zoo animals in cages says Study.

அடுத்த செய்தி