ஆப்நகரம்

பத்திரிகையாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

கார் விபத்தில் உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2018, 12:38 pm
கார் விபத்தில் உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil shalini_family_fund_cover_pic
செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு


சென்னையில் பிரபல தனியார் தொலைகாட்சியில் பணியாற்றி வரும் பெண் செய்தியாளர் ஷாலினி நேற்று திண்டுக்கல்லில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவருக்கு நேற்று பிறந்தநாள். பிறந்தநாளன்று ஷாலினி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஷாலினியின் மறைவுச்செய்தியை அறிந்த அமைச்சர் ஜெயகுமார், இரங்கல் செய்தி வெளியிட்டார். ஷாலினியின் மரணம் தன்னை உலுக்கிவிட்டதாகவும், சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் செய்தியாளரின் உயிர் விலை மதிப்பில்லாதது. அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.




தொடர்ந்து இன்று இரங்கல் தெரிவித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாளன்று செய்தியாளர் ஷாலினி உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஷாலினி அவர்களது இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு


இந்நிலையில் செய்தியாளர் ஷாலினியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செல்வி. ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மாலை முரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழந்த இரங்கல்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்திற்கு, சிறப்பு நிகழ்வாக முதலமைச்சரின் பொது நிவாரன நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி