ஆப்நகரம்

சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை வந்தடைந்தார் முதல்வர் பழனிசாமி

சேலத்தில் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சென்னை வந்தடைந்தார்.

Samayam Tamil 30 Jul 2018, 3:20 am
சேலத்தில் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சென்னை வந்தடைந்தார்.
Samayam Tamil 64552854
சென்னை வந்தடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் பரவியதை அடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கருணாநிதியின் உடல் சீராகி உள்ளது. இதை திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்றிரவு சென்னை வந்தடைந்தார் முதல்வர் பழனிசாமி.

சென்னைக்கு வந்த பின் நேராக பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றார். விரைவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி