ஆப்நகரம்

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும் சாதித்துக் காட்டுவோம் என பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2021, 1:17 pm
பல்லாவரம் பகுதியில் உள்ள அருள் முருகன் தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், மகளிர் சுய உதவிக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Samayam Tamil பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!
பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!


கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
சுய உதவிக் குழுக்களுக்கு ஜெயலலிதாதான் உயிர் கொடுத்தார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் சேவை குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக 28 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்தார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 80 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

இப்போதைய ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகையை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாயாக இருந்த முதல்வர் காப்பீடு தொகை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் காப்பீட்டின் கீழ் நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அமைச்சர்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை?: இதுதான் உண்மை!

அதிமுக அரசு எடுத்து முயற்சியின் காரணமாகக் கூடுதலாக 317 மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்லூரி கட்டன தொகை செலுத்த முடியாதவர்களுக்கு அரசே கல்வி தொகையைச் செலுத்துகிறது. மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் விதத்தில் இதுவரை 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும் சாதித்துக் காட்டுவோம். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி