ஆப்நகரம்

திறக்க ரெடி... செமஸ்டர் தேதி அறிவித்த அண்ணா யுனிவர்சிட்டி

ஏப்.15ம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 11:40 pm
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகக் கல்வித்துறை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கின. அதேபோலகல்லூரிகள் திறப்ப்தற்கான தேதி குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Anna University


இதன்படி, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்.18ம் தேதி தொடங்கி, மே 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மே 24ம் தேதி செய்முறை தேர்வுகளும், ஜுன் 2ம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது.

இதேபோல, இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் ஏப்.12ம் தேதி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஏப்.15ம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு!

அடுத்த செய்தி