ஆப்நகரம்

கொரோனா 2ஆம் அலை உண்மையா: அரசு சொன்ன பதில் இதுதான்!

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Samayam Tamil 17 Mar 2021, 1:07 pm
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
Samayam Tamil கொரோனா 2ஆம் அலை உண்மையா: அரசு சொன்ன பதில் இதுதான்!

தமிழகத்தில் கொரோனா நோயைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய நிலை. எனவே பொதுமக்கள் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது மூலம் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் தற்போது வரை 16 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர் எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ரெண்டு பேருக்கு கொரோனா... மீண்டும் ஹாட் ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு மார்க்கெட்?

தமிழகத்தில் ஏற்கனவே பரவி வந்த கொரோனா நோய்தான் தற்போதும் உள்ளது. புதிதாக வேறு விதமாக எந்த கொரோனா நோயும் தமிழகத்தில் தற்போது வரை பரவவில்லை.

சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டை ,அண்ணா நகர் ,அம்பத்தூர்,அடையார்,வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி