தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பீதி அடங்கியிருந்த நிலையில் தற்போது அது ஒமைக்ரான் லடிவில் மீண்டும் கிளம்பியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி திரும்பிய நபருக்கும், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மற்றொரு நபருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியன.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் ஒரே நாளில் 4 நபர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் ஒரே நாளில் 4 நபர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.