ஆப்நகரம்

தலைநகரில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா!

சென்னையில் இன்றும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 500 க்கும் கீழாக (489) பதிவாகியுள்ளது.

Samayam Tamil 20 Nov 2020, 10:10 pm
மாநில அளவில் நாள்தோறும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னை தான் இன்றும் முதலிடத்தில் உள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
கொரோனா -சென்னையில் இன்றைய நிலவரம்!


அதேசமயம் தினமும் கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சென்னையில் 500-க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

மாநகரில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 500 -க்கும் கீழாக, 489 ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று மட்டும் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இறங்குமுகம் காட்டும் கொரோனா!

கொரோனா சிகிச்சை முடிந்து மொத்தம் 418 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனை, தனிமைப்படுத்தல் மையங்கள், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுதல் என்று மொத்தம் 4,622 பேர் தற்போது சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி