ஆப்நகரம்

கலெக்டருக்கு கொரோனா...ஜி.ஹெச்.சில் அட்மிட்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Nov 2020, 3:40 pm
திருவள்ளூரில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு கடந்த 30 ஆம் தேதி, காஞ்சிபுரம் ஆட்சியராக மகேஸ்வரி ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
Samayam Tamil காஞ்சிபுரம் கலெக்டர்
காஞ்சிபுரம் கலெக்டருக்கு கொரோனா


இந்த நிலையில் நேற்று காலை முதல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று கொரானா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து. தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன கைக்குழந்தை...போலீஸ் எஸ்.ஐ.க்கு 'மெமோ' !

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி