ஆப்நகரம்

கொரோனா விதிமீறல்...சென்னைவாசிகளிடம் இவ்வளவு கோடி ரூபாய் வசூல்!

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களிடம் மொத்தம் 14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது, இவற்றில் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக மட்டும் அனைத்து மண்டலங்களையும் சேர்த்து 2.57 கோடி ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 7:59 pm
தமிழக அளவில் தலைநகர் சென்னையில்தான் இன்றும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாள்தோறும் சராசரியாக 5, 000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
Samayam Tamil fine


ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார காரணங்களுக்காக அறிவிக்கப்பட்டு வரும் இந்த பொதுமுடக்க தளர்வுகளால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இத்தகைய சூழலில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரே நாளில் 20% பாதிப்பு: சென்னையில் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு?

இதில் முக்கியமாக, பொது இடங்களில் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு 100 ரூபாயும், வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் வரை அபராதமும், ஓட்டுனர் உரிமத்தை ஆறு மாதங்கள் வரை பறிமுதல் செய்ய நடைமுறையும் அமலில் உள்ளது. இதேபோன்று, பொது இடங்களில் சரீர இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கொரோனா பரவல் கட்டுப்பாடு விதிமீறல்களை மீறியதற்காக சென்னையின் அனைத்து மண்டலங்களையும சேர்த்து பொதுமக்களிடம் நேற்று வரை (அக்டோபர் 9) மொத்தம் 14.02 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக மட்டும் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 2.57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 45 லட்சம் ரூபாயும், இதற்கு அடுத்தப்படியாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 28 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி