ஆப்நகரம்

சென்னையில் இப்போதுதான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது...ஆய்வு சொல்வதென்ன?

சென்னையில் சிறு கூட்டங்கள்தான் இப்போதைய நேரத்தில் கொரோனாவை பெரும் கடத்திகளாகச் செயல்படுகின்றன என்பது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது...

Samayam Tamil 17 Oct 2020, 5:08 pm
தலைநகர் சென்னையில் சிறு கூட்டங்கள், தனியார் நிகழ்ச்சிகள் காரணமாகவே கொரோனா பரவல் அதிகளவில் நடப்பது தெரியவந்துள்ளது. இந்த கூட்டங்கள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்குக் கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Samayam Tamil சென்னையில் இப்போதுதான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, ஆய்வுகள் சொல்வது என்ன?
சென்னையில் இப்போதுதான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, ஆய்வுகள் சொல்வது என்ன?


ஆம், உண்மைதான். சென்னை தி. நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கொரோனா அச்சம் காரணமாகக் காய்கறி சந்தை என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் எதற்கும் செல்வதில்லை. ஆனாலும் இவருக்கு கொரோனா சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

எதனால் வந்திருக்கும் எனக் கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில், ராஜேஷ் வீட்டிற்கு வந்த அவரது சொந்தக்காரர் இளங்கோவனுக்கு கொரோனா இருந்துள்ளது தெரியவந்தது. இளங்கோவன் சொந்தக்காரர் திருமணம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து நேராக ராஜேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன் காரணமாகவே தொற்று பரவியுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் மாவட்டத்தில் மக்கள் வெளியே செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக மக்கள் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, வெளியே கூடுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

கொரோனா கொள்ளை: மருந்தே இல்லை, லட்சக் கணக்கில் பண வசூல்!

ஆனால், இப்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டப்பின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இந்த நிலைத் தொடர்பாகச் சென்னை மாநகர அதிகாரிகள் கூறுகையில், “இப்போதைய நேரத்தில் திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டங்களில்தான் கொரோனா பரவல் அதிகளவில் உள்ளது” என்கின்றனர்.

ஒருவேளை இதுபோன்ற இடங்களில் நம்மை கொரோனா தாக்கிவிட்டால், அதன்பின் அடுத்த 15 நிமிடங்கள் அதே இடத்தில் நாம் இருப்பது மிகப் பெரிய ஆபத்தாக மாறிவிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையை உணர்ந்து நாம் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் சூழலில், நமது உயிர்களைப் பாதுகாப்பது நமது கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த செய்தி