ஆப்நகரம்

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு நேர்ந்துள்ள கதி... பெற்றோர் பீதி!

சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வளாகத்தில் உள்ள அனைத்து துறைகள், விடுதிகள் உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

Samayam Tamil 14 Dec 2020, 1:15 pm
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் கடந்த 7 ஆம் தேதி ( டிசம்பர் 7) மீண்டும் திறக்கப்பட்டன.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை ஐஐடி


முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்லூரிகள் திறந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், பிரபல உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், ஐந்து ஊழியர்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னையில இருந்து திரும்பவும் நீங்க மெரினா பீச்சுக்கு போகலாம்!

இதனையடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள அனைத்து துறைகள், நூலகங்கள், மாணவர் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூட நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

71 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பிற மாணவர்கள், ஊழியர்கள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"கிங் மருத்துவமனையில் சிகிச்சை: கொரோனா கண்டறியப்பட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர்களுக்கு, கிண்டி கிங் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஐடி மாணவர்கள் உட்பட 444 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஏரியாவுல எல்லாம் செவ்வாய்க்கிழமை பவட் கட்!

ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் யாரும் அச்சமடைய வேண்டாம், இதனை ஒரு பாடமாக எடுத்து கொண்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும்" என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை செய்துவரும் நிலையில், கல்லூரி திறந்து சில நாட்களிலேயே ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பிற கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அச்சமடைய செய்துள்ளது.

அடுத்த செய்தி