ஆப்நகரம்

காவல் துணை ஆணையருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

சென்னையில் காவல் துறை உயரதிகாரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 May 2020, 4:09 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
Samayam Tamil dcp


இதன் பயனாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அரசு கூறி வருகிறது. இருப்பினும் தேசிய அளவிலும், தமிழகத்திலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாதாரண மக்களை மட்டுமின்றி, கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று நேரடியாக போராடிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்டோரையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை.

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் என்ன? துல்லியமான தகவல்...

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகப் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்ததையடுத்து அவருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி