ஆப்நகரம்

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்... கொரோனா தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடக்கம்!

கொரோனா வைரஸுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் மூன்றாம்கட்ட பரிசோதனை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 6:27 pm
இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனெகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை 'கோவிஷீல்டு' என்ற பெயரில் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
Samayam Tamil corona trial


கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசிக்கான மருத்து பரிசோதனைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதன் மூன்றாம்கட்ட பரிசோதனை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

மனிதர்களுக்கு செலுத்தப்படும் இந்த முக்கியமான பரிசோதனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமசந்திரா மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. 18 முதல் 55 வயதுக்குட்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.

யப்பா...கொரோனா தடுப்பூசி வாங்க இவ்வளவு கோடி ரூபாய் தேவையாம்!

முன்னதாக, மூன்றாம்கட்ட பரிசோதனைக்காக 300 கோவிஷீல்டு தடுப்பூசிகள், புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து, கடந்த மாதம் சென்னை வந்தடைந்தன. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கடந்த மாத இறுதியில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவித்தது.

உலகமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை தொடரலாம் என்று சில தினங்களுக்கு பிறகு அப்பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனையடுத்து, சென்னையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.

சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கு கொரோனா

சென்னையை தவிர, டெல்லி, புணே உட்பட நாட்டில் 16 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி