ஆப்நகரம்

மயானத்திலும் லஞ்சம்... கார்ப்பரேஷன் ஆபிசர் கைது!

மயான பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 25 Nov 2020, 8:52 am
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் 196 வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விக்னேஷ்வரன்.
Samayam Tamil லஞ்சம் -ஆபிசர் கைது
ல்ஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது


இவர் ஈஞ்சம்பாக்கம் மயான பூமியில் அடக்கம் செய்யும் உடல்களுக்கு மாநகராட்சி தரும் பணத்தை வழங்க ஆவண செய்ய ஒப்பந்ததாரரிடம் 5,000 ரூபாய் கேட்பதாக ஒப்பந்தம் எடுத்த ரஞ்சித் என்பவர் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 5,000 ரூபாய் பணத்தை ரஞ்சித் மூலம் கொடுத்து விக்னேஷ்வரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு

233 உடல்களை அடக்கம் செய்ததற்கான பணத்தை தருவதற்கு கடந்த ஒரு மாத காலமாக 10% தொகையை லஞ்சமாக கேட்டு விக்னேஷ்வரன் தொந்தரவு செய்ததால் புகார் அளித்ததாக ரஞ்சித் தெரிவித்தார்.

அடுத்த செய்தி