ஆப்நகரம்

குறுகிய கிணற்றில் தவறி விழுந்த பசு; திறமையாக மீட்ட சென்னை மக்கள்!

கிணற்றில் தவறி விழுந்த பசுவை, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான மீட்டனர்.

Samayam Tamil 6 Aug 2018, 4:17 pm
சென்னை: கிணற்றில் தவறி விழுந்த பசுவை, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான மீட்டனர்.
Samayam Tamil Cow rescued


சென்னையை அடுத்த ஐயப்பன் தாங்கலில் குறுகிய சுற்றளவு கொண்ட கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. இதன் ஆழம் 15 அடி ஆகும். இந்த கிணற்றின் சுற்றளவு மிகக் குறுகியதாகும்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்கிய நபர், நிற்க கூட இடமில்லை. அவர் மாட்டின் மீது நின்று கொண்டே, கயிற்றால் கட்டியுள்ளார். இதற்கு மட்டும் அரை மணி நேரம் ஆகியது.

இதையடுத்து பொதுமக்கள் மேற்புறத்தில் இருந்து கயிற்றை இழுத்துள்ளனர். தொடர்ந்து 15 நிமிடங்களில் மாட்டை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். அங்கு விலங்குகள் நல மருத்துவர்கள், மீட்பு குழுவினருடன் தயாராக இருந்தார்.



அவர் மாட்டின் காலில் ஏதேனும் முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தார். ஆனால் அப்படி முறிவு ஏதுமில்லை. மாட்டின் வெளிப்புறத்தில் ஒருசில காயங்கள் மட்டுமே இருந்தன. அதற்கு சிகிச்சை அளித்த பிறகு, மாட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Cow rescued from narrow well in Chennai.

அடுத்த செய்தி