ஆப்நகரம்

தா. பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Sep 2018, 9:10 pm
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil tha_pandian_long_10270_13089_19213


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் சிகிச்சைக்கு பின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று மீண்டும் முச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக தொற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி