ஆப்நகரம்

அரசு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார் நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

Samayam Tamil 11 May 2019, 1:58 pm
சென்னை தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலில் வசித்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அந்த வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
Samayam Tamil 1200px-R.Nallakannu


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அந்தக் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வரவுள்ளதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம்பெயருமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நல்லகண்ணு அவர்களும் தன் அரசு குடியிருப்பு வாடகை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவர் சென்னை கே.கே.நகரில் குடியேறியுள்ளார்.


அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் மூத்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவுக்கு இலவசமாகவே அரசு குடியிருப்பு தரப்பட்டது. ஆனால் அந்தக் குடியிருப்பில் தங்கியிருக்கும் மற்றவர்களைப் போல தானும் வாடகை கொடுத்தே தங்கியிருந்தார் நல்லகண்ணு.

தற்போது அவர் அங்கிருந்து இடம் மாறியுள்ள நிலையில், அவருக்கு வேறு இடத்தில் தமிழக அரசே வீடு வழங்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி