ஆப்நகரம்

சென்னை பேருந்து நிலையங்களில் டூவீலர் பார்க்கிங் வருமா? - பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை!

சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும் என பயணிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 8 May 2023, 11:40 am

ஹைலைட்ஸ்:

  • பேருந்து நிலையங்களில் டூவீலர் பார்க்கிங்
  • பயணிகள் இடையே வலுக்கும் கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil mtc bus stand
mtc bus stand
சென்னையில் 6 பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் இறங்கியுள்ளது. அதாவது, அம்பத்தூர், பெரியார் நகர், திருவிக நகர், முல்லை நகர், கவியரசு கண்ணதாசன் நகர் ஆகிய 5 பேருந்து நிலையங்கள் தலா 5 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதேபோல், 25 கோடி ரூபாய் மதிப்பில் தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது.
டூவீலர் பார்க்கிங் - கோரிக்கை

இந்நிலையில், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால், தங்களது இருசக்கர வாகனங்களை பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து கூறிய அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது, ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் இருக்கின்றன. அதேபோன்று, பேருந்து நிலையங்களிலு இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைத்தால், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் யோசனை கூறினார்.
சென்னை யானைகவுனி மேம்பாலம் எப்போது திறப்பு? - அட... இவ்வளவு வேலை முடிஞ்சிருச்சாமே!
அமைச்சர் கொடுத்த அப்டேட்

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆவடி மற்றும் பாண்டிய நல்லூர் பேருந்து டெப்போக்கள் முறையே 10.76 கோடி ரூபாய் மற்றும் 5.43 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என கூறினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, வடபழநி, திருவான்மியூர், தி.நகர், வியாசர்பாடி உள்ளிட்ட16 பேருந்து நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களை தனியார் பங்களிப்புடன் தொடங்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம்

இதனிடையே, ஓய்வுபெற்ற பொறியியல் பேராசியர் ஒருவர் தெரிவித்தபோது, பயணிகள் வீட்டில் இருந்து பேருந்து நிலையங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்லும்போது அதனை பாதுகாப்பாக நிறுத்த பேருந்து நிலையங்களில் வசதிகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிரமமின்றி பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல வசதியாக இருக்கும்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், சிஎம்டிஏ சார்பில் முதற்கட்டமாக 6 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் ஆய்வு செய்துள்ளார். தேவைப்பாட்டால் இந்த பேருந்து நிலையங்களில் பார்க்கிங் வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டால் சென்னைவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி