ஆப்நகரம்

டிஜிபி கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்… மெர்சலான ஆட்டோ ஓட்டுநர்!

சென்னை ஆட்டோ ஓட்டுனருக்கு, டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்.

Samayam Tamil 27 Jan 2022, 7:16 pm

ஹைலைட்ஸ்:

  • டிஜிபி கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்
  • மெர்சலான ஆட்டோ ஓட்டுநர்
  • நேரில் அழைத்து பாராட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஆட்டோ ஓட்டுனருக்கு கிடைத்த பரிசு
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.
இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.


தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட்,
சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

புதிய ரேஷன் கார்டுகள்; சென்னை மக்களுக்கு பெரிய ஷாக்!

மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார்.
இந்நிலையில் இன்று ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அடுத்த செய்தி