ஆப்நகரம்

டாஸ்மாக் சரக்கு விற்பனை கொஞ்சம் டல்... ஆனாலும் சேல்ஸ் இவ்வளவா?

டாஸ்மாக் மதுபான கடைகளில் நேற்று இரண்டாவது நாளாக சரக்குகளின் விற்பனை 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2021, 12:08 pm

ஹைலைட்ஸ்:

  • டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று முன்தினம் மீண்டும் திறப்பு.
  • முதல் நாளில் 164 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை.
  • இரண்டாம் நாளான நேற்று 127.09 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil டாஸ்மாக் சரக்கு விற்பனை
டாஸ்மாக்கில் நேற்று இரண்டாவது நாளாக சரக்கு விற்பனை 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, பிற 27 மாவட்டங்களில் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் குஷியாகின்றன.

இது கொடூரமான கொரோனா காலம் என்றுகூட பாராமல், ஏதோ விழாக்கால மூடில் டாஸ்மாக் கடைகளுக்கு ஆர்வமுடன் சென்று சரக்குகளை வாங்கி குவித்தனர்.

டாஸ்மாக்கின் உயிர் நாடி மதுரைதான்: மொத்த பட்டியலும் இதோ!

இதன் காரணமாக, நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் மாநிலம் முழுலதும் 164.37 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகள் விற்று தீர்த்தன.அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.54 கோடி ரூபாய் மதிப்புக்கு 'குடி' மகன்கள் சரக்குகளை சரமாரியாக வாங்கி குடித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளில் முந்தைய நாளைவிட சரக்கு விற்பனை சற்று குறைந்தது, இருந்தாலும் நேற்றும் டாஸ்மாக்கில் 100 கோடி ரூபாயை தாண்டி மதுபானங்கள் லிற்பனையாகியுள்ளன.

27 மாவட்டங்களிலும் நேற்று மொத்தம் 127.09 கோடி ரூபாய் மதிப்புக்கு சரக்குகள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி