ஆப்நகரம்

காவேரி மருத்துவமனை பகுதி- போலீசார் கட்டுப்பாட்டிற்குள் வந்தது

காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் நிலவி வந்த அசாதாரண சூழலை போக்கி, போலீஸார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Samayam Tamil 30 Jul 2018, 1:18 am
காவிரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் நிலவி வந்த அசாதாரண சூழலை போக்கி, போலீஸார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Samayam Tamil 037caa20-ad24-46b1-9ff5-fb3861f36834.
விடுமுறை அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலால் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடத்தொடங்கியதால், போலீசார் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் குவிக்கப்பட்டனர்.

அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார்.

போலீஸார் கட்டுப்பாடில் காவேரி மருத்துவமனை


மேலும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல், தொண்டர்கள் அமைதி காக்க என தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று வர பாதைகள் போடப்பட்டு, அதில் யாரும் போய் வராத படி பேரிகேடுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். சேலத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கருணாநிதியை சந்திப்பார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

கருணாநிதியின் உடல் சீராக இருப்பதை தெரியவந்ததை அடுத்து காவேரி மருத்துவமனை வளாகம் மற்றும் கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மெல்ல கலைந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி