ஆப்நகரம்

கட்சி பணிகளில் தீவிரம் காட்டும் உதயநிதி... இந்த சம்பவம்தான் உதாரணம்!

திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Samayam Tamil 14 Jun 2021, 2:29 pm

ஹைலைட்ஸ்:

  • திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
  • தி.நகர் தொகுதி திமுக எம்எல்ஏ அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
  • மயிலாப்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்
தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் இன்று தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, சி.பி.ராமசாமி சாலையில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்..

இந்நிகழ்வின் போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மயிலை வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

லாக்அப் டெத்துக்கு நீதி கேட்டு உயிரைவிட தயாரான மூன்று பேர்!

பின்னர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், சேப்பாக்கம் பகுதி மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் தலா 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாமையும் உதயநிதி ஸடாலின் தொடக்கி வைத்தார்.

திமுகவில் சீனியர் தலைவர்கள் பலர் இருக்கும்போது கட்சி எம்எல்ஏக்களின் தொகுதிகளில் அலுவலகங்ரளை உதயநிதி திறந்து வைப்பது, அவர் கட்சி நிர்வாகம், நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார் என்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி