ஆப்நகரம்

நூற்றுக்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகளில் ஒட்டப்பட்ட எச். ராஜா போஸ்டர்

சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட குப்படைத்தொட்டிகளில் எச். ராஜாவின் போஸ்டரை ஓட்டி திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 19 Apr 2018, 7:31 pm
சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட குப்படைத்தொட்டிகளில் எச். ராஜாவின் போஸ்டரை ஓட்டி திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil 9589969d-84a8-4823-a471-6e1257499935.
குப்பைத்தொட்டிகளில் ஒட்டப்பட்ட எச். ராஜா போஸ்டர்


பாஜக-வின் தேசிய செயலாளர் எச். ராஜா நேற்று பதிவிட்ட ட்வீட் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை மறைமுகமாக எல்லை மீறி விமர்சிக்கும் வகையில் இருந்தது.

இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர்.

எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் திமுகவினர் செய்தனர். ஆனால் இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் எச். ராஜா தேர்தல் பணிகளுக்காக கர்நாடகா சென்றுவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுயிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்றும் திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எச். ராஜாவின் போஸ்டரை 100க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகளில் ஒட்டப்பட்டு அவரது செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்ரமணியன், எச். ராஜா ஒரு மனிதக்கழிவு. அவர் குப்பையில் போட வேண்டியவர் தான். மேலும் எச். ராஜா பெரியார் சிலைகளை உடைப்போம் என்றார், அதனால் அவரை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளோம் என்றார் மா. சுப்ரமணியன்.

வரலாற்று சிறப்பு மிக்க திமுக எச். ராஜா விவகாரத்தில் இப்படி இழிவு செய்வது சரியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், தரம் தாழ்ந்து எதுவும் செய்யவில்லை எச். ராஜாவை சேர வேண்டிய இடத்தில் சேர்த்துள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்