ஆப்நகரம்

தலைவர் ஸ்டாலினை மீறி எதுவும் செய்யமாட்டோம்: போர்க்கொடி தூக்கிய நிர்வாகி பல்டி

திமுக சார்பில் விருகம்பாக்கம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய க.தனசேகரன் அவருக்கு ஆதரவாக தற்போது பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்

Samayam Tamil 14 Mar 2021, 6:17 pm
திமுகவின் விருகம்பாக்கம் தொகுதி நிர்வாகி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினரும் ஆகிய க.தனசேகரன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சென்னைை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
Samayam Tamil anna arivalayam


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும்

திமுகவை மீறியும் திமுக தலைவர் ஸ்டாலினை மீறியும் எந்த ஒரு செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

தகுதி, தராதரம் பாத்துதான் சீட் ஒதுக்க முடியும்... தேமுதிகவை சாடிய இபிஎஸ்!

திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என தலைவர் அறிவுறுத்தியதால் நாங்கள் அவரை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் என அவர் கூறினார்.

இவர் இதற்கு முன் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக ஏ.வி.எம்.பிரபாகர் ராஜாவை அறிவிக்கப்பட்டதற்கு எதிராக தனது ராஜினாமா கடிதத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி