ஆப்நகரம்

கருணாநிதி இறுதி அஞ்சலி ஏற்பாடு- திமுக அறிக்கை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் இல்லம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் குடும்பத்தார் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2018, 8:23 pm
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் கோபாலபுரம் இல்லம் மற்றும் சிஐடி காலனி இல்லத்தில் குடும்பத்தார் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil dravindian_king
கருணாநிதி இறுதி அஞ்சலி குறித்து திமுக அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமானதை அடுத்து, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தி கேட்டு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மிகுந்த வேதனைக்கு ஆளாகி, கண்ணீர் கடலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக கழகம் சார்பில் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை குடும்பத்தாரின் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

அதை தொடர்ந்து கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அதிகாலை 3 மணி வரை குடும்பத்தார் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கிற்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கு பொதுமக்களும், திமுக தொண்டர்களும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் செய்தி அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி திமுக கொடிகள் ஏழு நாட்களுக்கு அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படும் என க. அன்பழகன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி