ஆப்நகரம்

போலீசிஸை பார்த்ததும் தலைத்தெறிக்க ஓடிய டிரைவர்... சரக்கு வேனில் சிக்கிய ஒரு டன் குட்கா!

போலீசை கண்டதும் தலைத்தெறிக்க ஓடிய டிரைவர் ஓட்டிவந்த வேனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் ஒரு டன் அளவுக்கு குட்கா இருந்தது கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.

Samayam Tamil 23 Jan 2021, 11:50 pm
சென்னை பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சந்திப்பு, வெளிவட்ட சாலை, மதனபுரம் அருகே ரோந்து போலீசார் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வாகன தணிக்கையில் மேற்கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்று அவ்வழியே வந்துள்ளது.
Samayam Tamil சென்னை பீர்க்கன்காரணை போலீசார் பறிமுதல் செய்த குட்கா கடத்தல் வேன்
சென்னை பீர்க்கன்காரணை காவல் நிலைய்த்தில் நிறுத்தப்பட்டுள்ள குட்கா கடத்தல் வேன்


ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முரளி என்பவரும், உதவி ஆய்வாளர் லட்சுமணன் என்பவரும் அந்த வாகனத்தை மடக்கி நிறுத்தியுள்ளனர்.

போவீசாரை பார்த்ததும் வாகன ஓட்டுநர் சரக்கு வாகனத்தை சாலையிலேயே விட்டு விட்டு ஓடினார். வாகனத்தை பறிமுதல் செய்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

திருச்சியில் மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை கைது!

வாகனத்தின் பூட்டை உடைத்து பார்த்தபோது வாகனத்தினுள் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தப்பிச்சென்ற நபர்களை பீர்க்கன்காரணை ஆய்வாளர் பொன்ராஜ் தீவிரமாக தேடி வருகின்றார்.

அடுத்த செய்தி