வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னையில் நல்லப் மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாகப் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த மழைக் காரணமாகச் சென்னை புறநகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரும் அதிகளவில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே தலைநகருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகள் 60 சதவீதம் நிறைந்துவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மெட்ரிக் சதுர அடி ஆகும். இதில் இப்போது 6 ஆயிரத்து 893 மெட்ரிக் சதுர அடிக்கு நீர் நிறைந்துவிட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எப்போது? - அதிகாரிகள் சொல்வது இதுதான்!
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரி ஆயிரத்து 416 மெட்ரிக் சதுர அடி நீர் நிறைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231. செம்பரபாக்கம் ஏரி 2 ஆயிரத்து 781 மெட்ரிக் சதுர அடியில் இப்போது நீர் நிரம்பியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 ஆகும்.
சோழவரம் ஏரியில் 142 மெட்ரிக் சதுர அடி நீர் நிரம்பியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு ஆயிரத்து 81. அதேபோல் செங்குன்றம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மெட்ரிக் சதுர அடி. இப்போது இங்கு 2 ஆயிரத்து 367 மெட்ரிக் சதுர அடி நீர் நிரம்பிவிட்டது.
இந்த மழைக் காரணமாகச் சென்னை புறநகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரும் அதிகளவில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே தலைநகருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகள் 60 சதவீதம் நிறைந்துவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மெட்ரிக் சதுர அடி ஆகும். இதில் இப்போது 6 ஆயிரத்து 893 மெட்ரிக் சதுர அடிக்கு நீர் நிறைந்துவிட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு எப்போது? - அதிகாரிகள் சொல்வது இதுதான்!
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரி ஆயிரத்து 416 மெட்ரிக் சதுர அடி நீர் நிறைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231. செம்பரபாக்கம் ஏரி 2 ஆயிரத்து 781 மெட்ரிக் சதுர அடியில் இப்போது நீர் நிரம்பியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 ஆகும்.
சோழவரம் ஏரியில் 142 மெட்ரிக் சதுர அடி நீர் நிரம்பியுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு ஆயிரத்து 81. அதேபோல் செங்குன்றம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மெட்ரிக் சதுர அடி. இப்போது இங்கு 2 ஆயிரத்து 367 மெட்ரிக் சதுர அடி நீர் நிரம்பிவிட்டது.