ஆப்நகரம்

'புரேவி' புயல்...சென்னையில் மீண்டும் கனமழை?!

வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள புரேவி புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 10:17 pm
நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு நாட்களில் தொடர்ந்து 36 மணி நேரம் மழை பெய்தது. இதன் பயனாக, சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளதுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
புரெவி புயல் -சென்னைக்கு கனமழை வாய்ப்பு!


அதேசமயம் முடிச்சூர், கோவில்பாக்கம், தரமணி உள்ளிட்ட சென்னை புறநகர்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளமென சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிவர் புயல் மழை விட்டு நான்கு நாட்கள் ஆன பின்பும், புறநகர் பகுதியில் இன்னும் முற்றிலுமாக மழைநீர் வடியவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள புரேவி புயலின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பருவ மழை பெய்யுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

சென்னையின் தாகம் தீர்க்க வந்துவிட்டது இன்னொரு நீர்த்தேக்கம்!

இதுகுறித்து சென்னை வானிலை மைய வட்டாரங்கள் கூறும்போது. " வங்கக் கடலில் நேற்று (நவம்பர் 29) உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்தமானுக்கும், இலங்கைக்கும் இடையே நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்தத்தின் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மழை பெய்யக் கூடும்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை, தென்காசி. தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது..!

அதேசமயம்,, வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரேவி புயலாக மாறினால், அதன் விளைவாக நிவர் புயலை போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழைக்கு வாய்ப்பில்லை.

அதேசமயம் புரேவி புயல் காரணமாக தென்சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்தத்தின் காரணமாக நுங்கம்பாக்கம் உள்ள நகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

ஏரிகளின் நீர் இருப்பு...சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்!

நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில், நிவர் புயலுக்கு முன்னர் சென்னை மாநகரில் 11% குறைவாக மழை பெய்திருந்தது. அதுவே நிவர் புயலுக்கு பின்னர் 31% கூடுதலாக மழை பெய்துள்ளது.

அதாவது, பருவமழை காலத்தில் சென்னை மாநகரின் சராசரி மழை அளவான 615.5 மில்லி மீட்டரை விட அதிகமாக, 808.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி