ஆப்நகரம்

இன்னைக்கும் செம கிளைமேட் தான்... என்ஜாய் மக்களே!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படுதால் குளிமையான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மாநகரவாசிகள் வீக் எண்டில் கூடுதல் உற்சாகத்துடன் உள்ளனர்.

Samayam Tamil 5 Dec 2020, 10:17 am
புரேவி புயல் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை கிளைமேட் டுடே


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மீண்டும் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. சென்னை இன்னொரு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியும் நேற்று திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் பகல் பொழுதில் மாநகர் மற்றும் புறநகர்களில் மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், . அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியலை ஒட்டியே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று செம்பரம்பாக்கம்... இன்று புழல் ஏரி!

காற்றில் தற்போது 80 சதவீதம் ஈரப்பதம் கலந்துள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த சில தினங்களாகவே குளிர்ந்த வானிலை நிலவுவதால் சிட்டிசன்ஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

அடுத்த செய்தி