ஆப்நகரம்

Breaking News: சென்னையில் ரயில் விபத்து; கடற்கரை நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் மின்சார ரயில் விபத்துக்கு உள்ளானதால் பயணிகள் அலறியடித்து நாலாப்புறமும் தெறித்து ஓடினர்.

Samayam Tamil 24 Apr 2022, 5:48 pm
சென்னை பணிமனையில் இருந்து, கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த மின்சார ரயில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர சத்தத்துடன் நடைமேடை மீது ஏறியது.
Samayam Tamil விபத்துக்கு உள்ளான ரயில்
விபத்துக்கு உள்ளான ரயில்


இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து குதித்து நாலாப்புறமும் தெறித்து ஓடினர். இந்த ரயில் விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் எதுவும் இல்லை. அதே சமயம், ரயில் ஓட்டுநர் சங்கர் மட்டும் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து ரயில் ஓட்டுநர் சங்கர் சிகிச்சைக்காக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடனே அழைத்துச்செல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

தமிழக டிஜிபி சூப்பர் அறிவிப்பு; போலீசார் செம குஷி!

இருந்தபோதிலும் ரயில் பெட்டியானது பலத்த சேதம் அடைந்திருப்பதால் ரயில்வே நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக ரயிலின் பிரேக் பிடிக்காததால் அருகில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஓட்டுநர் சங்கர் விரட்டி விட்டபடி கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பி இருப்பது தெரிய வந்துள்ளது.

அமைச்சர் பதவிக்கு வந்தது ஆபத்து?; மீண்டும் சிக்கலில் ராஜகண்ணப்பன்!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பின்னர், சேதம் அடைந்துள்ள பெட்டியை அகற்றிவிட்டு அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி