ஆப்நகரம்

ஏரிகளின் நீர் இருப்பு...சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்!

அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்னை புறநநகர் மற்றும் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெய்த பருவமழையின் பயனாக மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளது.

Samayam Tamil 29 Nov 2020, 8:33 am
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்னை புறநநகர் மற்றும் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெய்த பருவமழையின் பயனாக மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக வரும் கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள பிரதான ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு நிவவரம், இது கடந்த ஆண்டைவிட எவ்வளவு அதிகம் என்பவை குறித்து விவரிக்கிறது இப்புகைப்பட கட்டுரை.
Samayam Tamil enough water in lake there will no water scarcity in chennai on upcoming summer
ஏரிகளின் நீர் இருப்பு...சென்னை மக்களுக்கு 'குட்' நியூஸ்!


நீர் ஆதாரமாக இருக்கும் நான்கு ஏரிகள்

நான்கு ஏரிகள் சென்னை மாநகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும், செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளன. நிவர் புயல் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் வரத்து அதிகரித்து தற்போது நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.

ஒன்பது டி.எம்.சி

தற்போதைய நிலவரப்படி, பூண்டி ஏரியில் -2.72, புழலில் -2.81, சோழவரம் ஏரியில் -0.37, செம்பரம்பாக்கத்தில் -3.14 டி.எம்.சி என்று மொத்தம் 9 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.2 டி.எம்.சி. என்ற நிலையில், கிட்டதட்ட 80 சதவீதம் அளவுக்கு இவற்றில் நீர் இருப்பு உள்ளது. அண்மையில் பெய்த பருவமழையின் பயனாக சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பது மாநகரவாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு கவலையில்லை

தற்போதைய நிலவரப்படி, பூண்டி ஏரியில் -2.72, புழலில் -2.81, சோழவரம் ஏரியில் -0.37, செம்பரம்பாக்கத்தில் -3.14 டி.எம்.சி என்று மொத்தம் 9 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.2 டி.எம்.சி. என்ற நிலையில், கிட்டதட்ட 80 சதவீதம் அளவுக்கு இவற்றில் நீர் இருப்பு உள்ளது. அண்மையில் பெய்த பருவமழையின் பயனாக சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பது மாநகரவாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

கண்டலேறு, வீராணம்

சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நான்கு ஏரிகளை தவிர, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையான 4 டி.எம்.சி தண்ணீரில் இதுவரை 3.53 டி.எம்.சி. தண்ணீர் தமிழக எல்லையை அடைந்துள்ளது. கண்டலேறு அணை நீர் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 1.5 டி.எம்.சி மொத்த கொள்ளளவு உள்ள இந்த ஏரியிலிருந்து தற்போது சுமார் 1 டி.எம்.சி. நீர் இருப்பு இருப்பதும் சென்னைமாநகருக்கு இன்னொரு நற்செய்தியாகும்.

அடுத்த செய்தி