ஆப்நகரம்

ஃபேஸ்புக்கில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பிறகு பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Aug 2018, 6:12 am
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பிறகு பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 58e424b077bb70b90c8b5a4b-750-563
ஓரினச்சேர்க்கைக்காக அழைத்து பணம் கேட்டும் மிரட்டிய கும்பல் கைது


இன்று அன்றாட தேவைகளுக்கும் ஃபேஸ்புக் வலைதளத்தின் பயன்பாடு அவசியமாகி விட்டது. பல்வேறு நல்ல விஷயங்கள் இதன் மூலம் ஏற்பட்டாலும் பல விபரீதங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன.

சென்னையின் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு என்பவரும், தூத்துக்குடியை சேர்ந்த மந்திரமூர்த்தி என்பவரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களானார்கள்.

தினேஷ் பாபுவிற்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வமிருப்பதை தெரிந்துக்கொண்ட மந்திரமூர்த்தி உடலுறுவுக்காக நேரில் சந்திக்க வற்புறித்தியுள்ளார். அதற்கான வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக அறை எடுத்து தினேஷ் பாபு தங்கியுள்ளார்.

அங்கு வந்த மந்திரமூர்த்தி, தன்னுடன் மேலும் 3 நபர்களை கூட்டிவந்து தினேஷ் பாபுவை தாக்கியுள்ளார். தொடர்ந்து, நிர்வாணப்படுத்தி தினேஷ் பாபுவை அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

அதன்பிறகு ரூ 40,000 பணம் கொடுக்கும்படியும் அவ்வாறு கொடுக்கவில்லை எனில் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவோம் எனக்கூறி மிரட்டி இருக்கின்றனர்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என கூறிய தினேஷை, அந்த கும்பல் மீண்டும் தாக்கியுள்ளது. அப்போது தினேஷ் பாபுவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அறையில் இருந்த 5 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அறைக்குள் வந்த 3 பேர் மந்திரமூர்த்தியின் நண்பர்களான மாரியப்பன், இளையராஜா, முத்துராமலிங்கம் என்பது தெரிய வந்தது.

காவல்துறையினர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், முகநூல் மூலம் பலரிடம் பழகும் மந்திரமூர்த்தி, பெண்ணிடம் பேசினார் என்றால் பெண்ணை போல் பேசி நடித்து நேரில் சந்தித்து பணம் பறிப்பவர் என்பது தெரியவந்தது.

இதேபோல் மந்திரமூர்த்தியின் நண்பர் முத்துராமலிங்கம் இதுவரை 13 பேரிடம் இவ்வாறு பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்