ஆப்நகரம்

ஆன்லைனில் கார் விற்பனை: ரூ.1.5 லட்சம் மோசடி

ஓஎல்எக்ஸ் (OLX) மூலம் கார் வாங்க சென்னை வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jun 2018, 8:05 pm
ஓஎல்எக்ஸ் (OLX) மூலம் கார் வாங்க சென்னை வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 47628


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நயாஸ் அகமது. இவர் இன்னோவா கார் ஒன்றை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் வாங்க முடிவு செய்திருக்கிறார்.

இதில், சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சபீர் அகமது சில மாதங்களே ஆன இன்னோவா கார் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொண்டு நயாஸ் பேசியுள்ளார்.

பின், காரைப் பார்ப்பதற்கு பட்டினப்பாக்கம் சென்றுள்ளார் நயாஸ். நயாஸுக்கு காரைக் காண்பித்த சபீர், காரை பரிசோதித்து பார்க்குமாறு கூறினார். நயாஸ் காரை பரிசோதித்துவிட்டு ரூ.12 லட்சத்திற்கு காரை வாங்க சம்மதித்தார். சபீர் கேட்டபடி முன் பணமாக ரூ.1.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய சபீர் காரில் சிறிய பிரச்னைகள் சில இருப்பதாகவும் அதை அருகில் உள்ள மெக்கானிக் கடைக்குக் கொண்டு சென்றுதானே சரிசெய்து தருவதாகவும் கூறிய காரை ஓட்டுச்சென்றிருக்கிறார். காருடன் போனவர் திரும்பவே இல்லை. அவரை மீண்டும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

இதனையடுத்து நயாஸ் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சபீரைத் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி