ஆப்நகரம்

நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

Samayam Tamil 6 Aug 2018, 4:38 pm
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.
Samayam Tamil sff


சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இருக்கிறார். இன்றுடன் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் பணி நிறைவு பெருகிறது.

இதனை முன்னிட்டு இன்று அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர், உயர்நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் நிதி ஒதுக்குவது நிறுத்தப்படாது என முதல்வரும் நம்பிக்கையுடன் உறுதியளித்தார் என்றும் கூறினார்.

2002ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவர் பின், டெல்ல உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீ்திமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி நியமனம் பெற்றார்.

தற்போது இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளதும் இதுவே முதல் முறை ஆகும். ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உள்ளனர். இருப்பினும் இன்னும் 6 உச்சநீதிமன்ற நீதிபதி பணி இடங்கள் காலியாக உள்ளன.

Farewell function, Madras high court, chief justice, Indira Banerjee, Supreme Court judge

அடுத்த செய்தி