ஆப்நகரம்

மெரினா, தமுக்கத்தில் போராட்டம் : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் பிரமாண்டமாக போராட்டம் நடத்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மெரினா, மதுரை தமுக்கத்தில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்து வருகின்றனர்.

TNN 29 Mar 2017, 11:24 am
சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் பிரமாண்டமாக போராட்டம் நடத்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மெரினா, மதுரை தமுக்கத்தில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்து வருகின்றனர்.
Samayam Tamil farmers support protest in chennai marina and madurai
மெரினா, தமுக்கத்தில் போராட்டம் : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம் செய்தனர். இதை கண்டு உலகமே தமிழகத்தை திரும்பிப் பார்த்தது. இந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் போராட்டம் நடத்த சமூக வலைத்தளங்களின் மூலம் அழைக்கப்பட்டு வருகின்றது.



அதோடு மெரினாவிலும், மதுரையில் சில இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தை தொடங்கியும் உள்ளனர்.


(மெரினா பாதுகாப்பு)

இதுகுறித்து சென்னை காவல் துறையினர் பேசும் போது, “போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். போராட்டம் எதுவும் நடக்கவில்லை.” என தெரிவிக்கின்றனர்.

மதுரை தமுக்கம் போராட்டம்:


மதுரை தெப்பக்குளத்தில் போராடும் இளைஞர்கள்:





இந்நிலையில் “சோறு வேணும் நா, சேரு வந்து மெரினால” என வலைதளத்தில் வைரலாய் பரவி வருகின்றது, இதை பார்த்து காவல் துறையினர் கதறி வருகின்றனர். அதோடு சென்னை மெரினாவிலும், மதுரை தமுக்கம் ஆகிய முக்கிய இடங்களில் போராட்டம் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி