ஆப்நகரம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - 300வது நாள் போராட்டம் அறிவிப்பு

பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் 300வது நாள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 18 May 2023, 11:07 pm

ஹைலைட்ஸ்:

  • பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு
  • பரந்துர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு
  • மே 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Parandur airport
சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் மாவட்டம் பனங்கூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
ஆனால் அதற்காக பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களான ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம பகுதியில் உள்ள இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அப்போதியில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளைத்தை பின் தொடரவும்

ஆனால் விமான நிலையம் அமைக்க போகும் தகவல் தெரிந்ததும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள், விவசாயிகள், விவசாய அமைப்புகள் பல்வேறு அமைப்பினர் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.



அதன்படி பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போட்டி இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய கூட்டமைப்பு சார்பில் ஒன்பதாவது நாள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் குளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்.. போலீஸ் போட்ட அபராதம் எவ்ளோ தெரியுமா.?

பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட வரைபடத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பரப்பு உள்ள நீர்நிலைகள் அளிக்கப்படுவதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்தும் வருகிற மே 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நீர் நிலைகளையும், நிலத்தடி நீரையும் காக்கும் வகையில் ஏகனாபுரம் ஏரியில் நீரில் இறங்கி பரந்துர் நிலையம் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி