ஆப்நகரம்

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!

சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களில் குறிப்பிட்ட யூனிட்டுகளில் 50 சதவீதம் பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 May 2020, 8:53 am
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொது முடக்கம் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளன.
Samayam Tamil transport workers


ஜுன் 1 முதல் தமிழ்நாட்டில் நான்கு வழித்தடங்களுக்கான ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேருந்து போக்குவரத்தை எப்போது அறிவிப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நேற்று மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் தற்போதைக்கு பொது முடக்கத்தில் எந்தவித தளர்வையும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்க கூடாது. தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?

இருப்பினும் சென்னை, மும்பை,டெல்லி உள்ளிட்ட 13 பகுதிகளில் பொது முடக்கத்தில் எந்தவித தளர்வுக்கும் வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் FC யூனிட், RC யூனிட் பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பணியாளர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், கிருமி நாசினி உபயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி