பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த முறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் இருந்தும் பிற மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது.
அதன்படி, பொங்கல் பண்டிகை நாட்களை பயன்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் கண்காணிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கடந்த ஆறு நாட்களில் 250 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தாக குறிப்பிட்ட ஆம்னி பேருந்துகள் நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 5.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுக்கு இனிக்காத பொங்கல்... மாநகராட்சி தேர்தலில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
மேலும் வரி செலுத்தாதது, உரிமம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்டவை தொடர்பாக 11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளவர்கள் பண்டிகை முடிந்து தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பி வருவதால், அவர்களிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக பயணிகள் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சென்னை சென்ட்ரல் டூ பித்தரகுண்டா... ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!
கொரோனா கட்டுப்பாடுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் பயணக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.