ஆப்நகரம்

வானகரம் அருகே ஏ.சி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

சென்னை வானகரம் அருகே குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

TNN 15 Mar 2017, 3:41 pm
சென்னை: சென்னை வானகரம் அருகே குளிர்சாதனப் பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil fire breaks out at ac godown near vanagaram
வானகரம் அருகே ஏ.சி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து


மதுரவாயல் வானகரம் அருகே இருந்த குளிர்சாதனப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இது குறித்து தகவலறிந்து சமபவ இடதிக்ரு விரைந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நிறுவனங்களுக்கும் பரவி அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. அதனருகே ரசாயன தொழிற்சாலைகளும் பரவாதபடி தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

இன்று காலையிலேயே சிறிய மின் கசிவு ஏற்பட்ட நிலையில், தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரி சேதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இவ்விபத்துக்கான காரணம் குறித்து வானகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி