ஆப்நகரம்

மருத்துவமனையில் கருணாநிதி: முதல் புகைப்படம் வெளியானது

வெள்ளிக்கிழமை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2018, 3:01 pm
சென்னை: வெள்ளிக்கிழமை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sdfg


சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை மருத்துவ சிறப்புக் குழுவினர் எடுத்தனர்.

இதனையடுத்து கருணாநிதிக்கு ஆழ்வார்ப்பேட்டை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை கருணாநிதியை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து வந்தபோது சில புகைப்படங்கள் வெளியாகின. அதற்குப் அவருக்கு மூன்றாவது நாளாக சிகிச்சை அளித்துவரும் நிலையில், மருத்துவ அறிக்கைகள் மட்டுமே சில வெளியாகின.

இந்நிலையில் முதல் முறையாக கருணாநிதி சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறையிலிருந்து அவரது முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததைத் தொடர்ந்தைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கருணாநிதியை வெங்கையா நேரில் சந்தித்த காட்சி அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அருகில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உள்ளனர்.

அடுத்த செய்தி